சேப்பாக்கத்தில் கருணாநிதி தேறுவாரா?-வைகோ
கடலூர்:
2 ரூபாய்க்கு கிலோ அரிசி என்று கூறி வரும் கருணாநிதியின் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கடலூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், சென்னைக் கூட்டத்திலே நான் பேசியபோது சிலகேள்விகளை எடுத்து வைத்தேன். அதில் ஒரு கேள்விக்கு என் மீது தன் பேரப்பிள்ளையை விட்டு வழக்குதொடரச் செய்துள்ளார் கலைஞர். அதை நான் முறையாக சந்திப்பேன்.ஆனால் மற்ற கேள்விகளுக்கு என் மீது ஏன் வழக்குப் போடவில்லை? பொய்களை வாரி தூற்றி உங்கள்பத்திக்கைள் மூலம் அஸ்திரங்களைத் தொடுக்கிறீர்கள். நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்லிக்கொள்கிறீர்கள்.
மக்களை திசை திருப்பும் வகையில் பேசுகிறீர்கள், எழுதுகிறீர்கள். ஆனால் நான் கேட்ட கேள்விக்கு மட்டும்நேரடியான பதிலை சொல்ல மறுக்கிறீர்கள்.
கொஞ்சம் அசந்தால் 50 பைசாவுக்கு அரிசி தருகிறேன் என்பார் கலைஞர். அவர் ஜெயித்து வந்தால் கிலோ அரிசி2 ரூபாய்தானாம், ஜெயித்து வந்தால்தானே. கலைஞரே நீங்கள் சொல்லும் பிரசாரத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்.அது எடுபடாது.
கலைஞரின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மொத்தம் 27 நாட்கள். இதில் 9 நாட்கள் சேப்பாக்கத்துக்கு, 12நாட்கள் சென்னைக்கு. மொத்தம் 21 நாள் அவர் சென்னையில் தான் சுற்றப் போகிறார்.
ஆனால் இம்முறை சென்னை அவரைக் கைவிடப் போகிறது. மே 11ம் தேதி கலைஞருக்கு மிகப் பெரிய அதிர்ச்சிகாத்திருக்கிறது, சேப்பாக்கத்திலாவது தேறுவீர்களா என்று பார்ப்போம் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications