ஜெ-சசி கொள்ளையை தடுத்தாலே போதும்.. எல்லாம் தர முடியும்: -ஸ்டாலின்
திருநெல்வேலி:
ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சமூகத்தின் அத்தனை தரப்பினரும்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர்ஸ்டாலின் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஸ்டாலின் கடையநல்லூர்பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம்செய்தார். அவர் பேசுகையில்,கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் சமூகத்தின் அத்தனை தரப்பினரும்பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நெசவாளர்கள், விவசாயிகள்,பெண்கள் என அத்தனை பேருக்கும் இந்த ஆட்சியில் அவலம்தான் மிஞ்சியது.
திமுக கூறியுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியுமா என்று கேலிபேசுகிறார்கள்.ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலா குடும்பத்தினரும் அடித்துவரும் கொள்ளைகளை தடுத்து நிறுத்தினாலே அத்தனை திட்டங்களையும் எளிதில்நிறைவேற்ற முடியும்.
மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தினால் கிலோ அரிசியை 1 ரூபாய்க்குக் கூடவழங்க முடியும். அதேபோல சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான மிடாஸ்மதுபான தொழிற்சாலை மூலம் அடிக்கும் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தினால்,இலவச டிவி என்ன கேபிள் இணைப்பையும் கூட இலவசமாக கொடுக்க முடியும்.
நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதுபோல வருகிற சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே அபாரவெற்றி பெறும் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications