25 நாளில் கருணாநிதி முதல்வர்: தயாநிதி
கும்பகோணம்:
நள்ளிரவில் வீடு புகுந்து கருணாநிதியை தரதரவென இழுத்துச் சென்றதை மக்கள்மறக்காமல் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மத்திய அமைச்சர்தயாநிதி மாறன் கூறினார்.
கும்பகோணத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தயாநிதி மாறன் பேசுகையில்,நாடாளுமன்றத் தேர்தலில்40க்கு 40 என்ற நல்ல தீர்ப்பை வழங்கிய தமிழகமக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக 13 மத்திய அமைச்சர்கள் கிடைத்தனர்.அனைவரும் தாங்கள் சார்ந்துள்ள துறைகள் மூலம் தமிழகத்துக்கு மட்டுமின்றி, பிறமாநிலங்களுக்கும், நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
வைகோவின் ஆதரவால்தான் திமுக ஜெயித்ததாக சவால் விடுகிறார் வைகோ. அந்தஅளவுக்கு திமுகவின் நிலை மோசமாகி விடவில்லை. சோனியாவிடம் வைகோவைஅறிமுகப்படுத்தியதே கருணாநிதிதான்.
சன் டிவியில் தனக்கு முக்கியத்துவம் தரவில்லை, முகத்தைக் காட்டவில்லை என்கிறார்வைகோ. ஜெயலலிதா பதவி விலகக் கோரி அவர் போன பாதயாத்திரையைக்காட்டவில்லை என்று வருத்தப்படுகிறாரா அவர்?
திமுகவின் தயவால் கிடைத்த 4 எம்.பிக்களையும் முதலில் பதவி விலகச் சொல்லிவிட்டு பின்னர் வந்து வைகோ பேசட்டும்.
வாக்காளர்கள், நள்ளிரவில் வீடு புகுந்து கருணாநிதியை தரதரவென இழுத்துச்சென்றதை மறக்காமல் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். நடந்ததை மறக்கக்கூடாது என்றார் தயாநிதி மாறன்.
மன்மோகன், சோனியா பிரசாரம்:
பிரதமர் மன்மோகன் சிங் தேர்தல் பிரசாரத்திற்காக மே முதல் வாரம் தமிழகம்வரவுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, தனது தேர்தல் பிரசாரத்தை சென்னைதிருவல்லிக்கேணியில் இன்று தொடங்கினார். வீதி வீதியாக சென்று துண்டுப்பிரசுரங்களைக் கொடுத்து அவர் வாக்கு சேகரித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில், தமிழகத்தில் ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காகபிரதமர் மன்மோகன் சிங் மே முதல் வாரம் தமிழகம் வருவதாக உறுதியளித்துள்ளார்.கண்டிப்பாக வருவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த மாதம் ஒரு நாளும், மே மாதம் ஒரு நாளும்என 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்வார்.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இனிமேல் மாற்றம் ஏதும் இருக்காது. அனைத்துவேட்பாளர்களின் வெற்றிக்காகவும் கட்சியின் அனைத்துத் தரப்பினரும் மும்முரமாகசெயல்பட்டு வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் கராத்தே தியாகராஜன் மீண்டும் சேர்ந்திருப்பதை வரவேற்கிறேன்.அவரது வருகையால் கட்சி பலமடையும் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications