அமைச்சருக்கு அடி-உதை, வேட்டி உருவல் கும்கும் கும்மாங் குத்து, ஓடி உயிர் தப்பினார்
பல்லடம்:
கோவை மாவட்டம் பொங்கலூர் அருகே நடந்த அதிமுக தொண்டர்கள் கூட்டத்தில் அமைச்சர் தாமோதரனுக்குஅடி, உதை விழுந்தது. அவரது வேட்டி-சட்டை கிழிக்கப்பட்டது. சேர்கள் வீசப்பட்டதால் போலீசார் உதவியுடன்உயிர் தப்பி ஓடினார் அமைச்சர்.
பொங்கலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் அமைச்சர் தாமோதரன். திமிர் கொஞ்சம் ஜாஸ்தி கொண்டஇவருக்கு இப் பகுதி அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.சென்னையில் அமைச்சரை சந்திக்கச் சென்ற பல அதிமுகவினருக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் கொடுவாயில் பகுதியில் தேர்தல் பிரச்சார அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
அப்போது அமைச்சர் தனது பாதுகாப்புக்கும் தன்னை உயர்த்துப் பேசவும் தனது ஜால்ராக்களையும் கூட்டிவந்திருந்தார். ஆனால், ஜால்ராக்களையும் மீறி அதிமுகவினர் அமைச்சருக்கு எதிராகப் பேசத் தொடங்கினர்.
அவர்களை அமைச்சரின் அல்லக் கைகள் தடுக்க முயலவே கடுப்பான அதிமுக தொண்டர்கள் சேர்களைத் தூக்கிஅல்லக் கைகள் மீது வீசினர். பதிலுக்கு அவர்கள் சேர் வீசவே, தொண்டர்கள் கும்பலாக பாயந்து சென்றுஅமைச்சர்களின் ஜால்ராக்களை புரட்டி எடுத்தனர்.
அடி, உதையோடு வேட்டியும் உருவப்பட்டதால் அரை நிர்வாண கோலத்தில் அவர்கள் தப்பியோடினர்.
இந்த களேபரத்தில் அமைச்சரும் எழுந்து ஓட முயன்றார். எங்கேயா ஓட்ற என்று கேட்டபடி அவரை நோக்கிமுதலில் பிளாஸ்டிக் சேர்களும், பின்னர் இரும்பு சேர்களும் வீசப்பட்டன.
சில தொண்டர்கள் மேடையிலேயே ஏறி அமைச்சரை மூஞ்சியிலேயே குத்தினர். சிலர் அவரது சட்டையைக்கிழித்தனர். வேறு சிலர் வேட்டியை உருவினர். இதையடுத்து தாமோதரன் அங்கிருந்து அய்யோ.. அம்மா..காப்பாத்துங்க என்று அலறியபடி ஓடவே,
சினிமாவில் வருவது மாதிரி கிளைமாக்சில் உள்ளே வந்த போலீசார் ஓடி வந்த அமைச்சரை உருவப்பட்டவேட்டியுடன் மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
கூட்டம் நடந்த இடத்துக்குப் பின்புறம் போலீஸ் பாதுகாப்புடன் வேறு ஒருவரிடம் வேட்டி, சட்டையை வாங்கிஅணிந்து கொண்டு காரில் ஏறித் தப்பியோடினார் அமைச்சர் தாமோதரன்.
அமைச்சருகே வேட்டி உருவப்பட்டு அடி, உதை, மூஞ்சி குத்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications