மேற்கு வங்கத்தில் இன்று முதல் கட்ட வாக்கு பதிவு
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடக்கிறது.
இந்த மாநிலத்தில் உள்ள 227 தொகுதிகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இன்று 45 இடங்களுக்கு தேர்தல்நடக்கிறது.மிக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 7 மணி முதல் சுறுசுறுப்பான வாக்குப் பதிவு நடந்து வருகிறது.இன்றைய தேர்தலில் சுமார் 32 லட்சம் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
2 ஹெலிகாப்டர்கள், 3,000 டிஜிட்டல் கேமராக்கள் உதவியுடன் வாக்குப் பதிவை தேர்தல் ஆணையம்கண்காணித்து வருகிறது. 92 தேர்தல் பார்வையாளர்களும் களத்தில் உள்ளனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ-திபேத்தியன் பார்டர் போலீஸ் உள்ளிட்ட மத்தியப்படைகளும் மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பகல் 12 மணி வரை 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications