பெண்ணாகரத்தில் முத்துலட்சுமி மனு தாக்கல்
சென்னை:
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரபலங்கள் இன்று வேட்பு மனு தாக்கல்செய்தனர்.
சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 13ம் தேதி தொடங்கியது. 14மற்றும் 16 ஆகிய இரு நாட்களும் விடுமுறை தினங்கள் என்பதால் வேட்பு மனுதாக்கல் நடைபெறவில்லை. முதல் நாளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரபலங்கள்மனுதாக்கல் செய்தனர்.15ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். இன்று மிகவும் நல்ல நாள் என்பதால்பெரும்பாலான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்செய்கின்றனர்.
நடிகர் விஜயகாந்த் இன்று விருத்தாச்சலத்தில் உள்ள உதவி ஆட்சியர் அலுவலகத்திற்குதொண்டர்கள் புடை சூழ சென்று விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியி வேட்பு மனுதாக்கல் செய்தார்.
அமைச்சர்கள் சி.வி.சண்முகம் (திண்டிவனம்), கே.பி.அன்பழகன் (பாலக்கோடு),விஜயலட்சுமி பழனிச்சாமி (வீரபாண்டி), முன்னாள் அமைச்சர்கள் தம்பித்துரை(பர்கூர்), எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் (குறிஞ்சிப்பாடி) ஆகியோரும் இன்று மனுதாக்கல் செய்தனர்.
பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிடும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தனதுஆதரவாளர்களுடன் சென்று தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மேட்டூர் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி மனு தாக்கல் செய்தார்.












Click it and Unblock the Notifications