டாடா - மக்கள் பதிலடி தருவார்கள்: பாஜக
நாகர்கோவில்:
டாடா மிரட்டல் போன்ற திமுகவின் அடாவடிகளுக்கு வருகிற தேர்தலில் மக்கள்சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன்கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,எங்களுக்கும், அதிமுகவுக்கும் இடையே ரகசிய கூட்டணி இருப்பதாக காங்கிரஸ்தலைவர் கூறுகிறார். தயாநிதி மாறன் மீதான பிரச்சினையிலிருந்து மக்களை திசைதிருப்ப இவ்வாறு பொய்யான செய்தியை வெளியிடுகிறார் காங்கிரஸ் தலைவர்.
கூட்டணியில் இருந்து கொண்டே இன்னொரு கூட்டணியை உருவாக்குவதும்,எதிர்க்கட்சிகளுடன் ரகசிய உறவு வைப்பதும் மாறன் குடும்பத்துக்கும், திமுகவுக்கும்பாரம்பரியமாக இருக்கலாம். ஆனால் பாஜக எப்போது வெளிப்படையானது.
தயாநிதி மாறன் டாடாவை மிரட்டிய விவகாரத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வோம். நாடாளுமன்றத்திலும் எடுத்து வைப்போம்.
மிகப் பெரிய நிறுவனங்களையே மிரட்டும் இவர்களை நினைத்தால், சிறு தொழில்செய்பவர்கள், ஏன் பெட்டிக் கடை நடத்துபவர்களின் நிலையை நினைத்தால் பயமாகஇருக்கிறது.
இதுபோன்ற அடாவடி மிரட்டல்களுக்கு மக்கள் வருகிற தேர்தலில் தக்க பதிலடிகொடுப்பார்கள். தயாநிதி மாறன் மீதான புகார் குறித்து உயர் மட்டக் குழு அமைத்துவிசாரிக்க வேண்டும் என்றார் ராதா.