ஒதுங்கினார் எல்.ஜி!
திருச்சி :
மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல்ஒதுங்கியுள்ளார். அவர் தற்போது எம்.பியாக இருக்கும் திருச்சியில் கூட பிரசாரத்திற்குவரவில்லை.
எல்.ஜி. என அரசியல் வட்டாரத்தில் அழைக்கப்படும் எல்.கணேசன், மதிமுகவைஅதிமுக பக்கம் கொண்டு போவதில் பெரும் முயற்சிகளை மேற்கொண்டவர்.சசிகலாவின் உறவிரான அவர் மூலமாகத்தான் வைகோவை வளைத்தார் ஜெயலலிதா.ஆனால், அதிமுக, மதிமுக கூட்டணி உருவாகி, தொகுதிப் பங்கீடு முடிவடைந்து,பிரசாரம் தொடங்கிய பின்னர் எல்.ஜி. அமைதியாகி விட்டார். அவரை எங்குமே காணமுடியவில்லை.
இதுகுறித்து மதிமுக வட்டாரத்தில் கேட்டால் பிரசாரத்தில் எல்.ஜி. ஈடுபடவில்லைஎன்பது உண்மை தான் என்றனர்.
எல்.ஜி. இப்போது திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.தற்போதைய சட்டசபைத் தேர்தலில் திருச்சி 2 தொகுதியில் மதிமுக சார்பில் முன்னாள்எம்.எல்.ஏ. மலர்மன்னன் போட்டியிடுகிறார். தனது எம்.பி தொகுதி என்ற போதிலும்கூட திருச்சி பக்கமே எல்.ஜி. வரவில்லை.
தனது மகனுக்கு வைகோவிடம் சீட் கேட்டிருந்தார் எல்.ஜி. ஆனால் நானேபோட்டியிடப் போவதில்லை, எனவே வாரிசுகள் யாருக்கும் இந்த தேர்தலில் சீட்கிடையாது என்று தெளிவாக கூறி விட்டார் வைகோ.
இதனால் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணாமாகவே எல்.ஜி. ஒதுங்கிவிட்டதாகக்கூறப்படுகிறது. அவரை சமாதானப்படுத்தும் வேலையெல்லாம் தேவையில்லை என்றுபிற நிர்வாகிகளிடம் வைகோ கூறிவிட்டாராம்.