கலாட்டா: வானத்தை நோக்கி சுட்ட வீரர்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்பும் அருகே வாக்குச் சாவடியில் வன்முறையில் ஈடுபட்ட கும்பலைக் கலைக்க வானத்தை நோக்கி சுட்டார்மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்.
சின்ன சேலம் புக்கரவாரி கிராமத்தில் இச் சம்பவம் நடந்தது. அங்கு வாக்களிக்க வந்த கூட்டத்தை கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார் மத்திய மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்.அப்போது அவருக்கும் அங்கு வாக்களிக்க வந்த ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்துஅவர் ஊருக்குள் சென்று சுமார் 50 பேரைத் திரட்டிக் கொண்டு வாக்குச் சாவடிக்கு வந்தார்.
அந்தக் கும்பல் அந்த வீரரை தாக்க முயன்றது. இதைத் தொடர்ந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வானத்தைநோக்கி சுட்டார் வீரர்.
இதையடுத்து அந்த 50 பேரும் சிதறியடித்து ஓடினர். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அருகில் ரோந்துப் பணியில்இருந்து போலீசாரும் அங்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஓட்டுப் பதிவு பாதிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications