ஆண்டிப்பட்டி ரகளை: சீமான் மீது 5 வழக்குகள்!
தேனி:
வாக்குச் சாவடிக்குள் புகுந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியதுதொடர்பாக ஆண்டிப்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் சீமான் மீது 5 பிரிவுகளின் கீழ்போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே ராஜேந்திரா நகர் என்ற இடத்தில்,அதிமுகவினர் புகுந்து கள்ள ஓட்டு போட்டனர்.இது குறித்து விசாரிக்கச் சென்ற சீமான் அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளுடன்வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதிமுக பூத் ஏஜென்டுகளுக்கு சாதகமாகசெயல்படுவதா என்று கேட்டு மோதலில் ஈடுபட்டார்.
இந்தத் தகராறில் கோபமடைந்த சீமான், அங்கிருந்து வாக்குப் பதிவு இயந்திரத்திற்கானமின் இணைப்பைத் துண்டித்து விட்டுச் சென்றார்.
இதைத் தொடர்ந்து சீமானை அதிமுகவினர் தாக்கினர்.
இந் நிலையில் சீமான் மீது வாக்குச் சாவடி தேர்தல் அதிகாரி தங்கவேல் பாண்டியன்காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் சீமான் மீது மொத்தம்5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீமானும் அதிமுகவினர் மீது புகார் கொடுத்துள்ளார். அதன் பேரிலும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.