For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா ராஜினாமா-ஆளுநருக்கு கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தேர்தல் படுதோல்வியைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா தனது பதவியைராஜினாமா செய்தார்.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக மண்ணைக் கவ்வியுள்ளது. இதைத் தொடர்ந்துஜெயலலிதா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவரது ராஜினாமாக் கடிதத்தை அமைச்சர் ஜெயக்குமார் ஆளுனர் சுர்ஜித் சிங்பர்னாலாவை நேரில் சென்று கொடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஆளுனர் பர்னாலா,அடுத்த ஆட்சி அமையும் வரை முதல்வர் பொறுப்பில் இருக்குமாறு ஜெயலலிதாவைகேட்டுக் கொண்டார்.

தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன்: ஜெ

இந் நிலையில் தனக்கு மக்கள் கொடுத்த தோல்வி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளஜெயலலிதா,

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கைஉள்ளது. எனவே மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். அதிமுகவுக்கும்,கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களித்த வாக்காளர்களுக்கு உளமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்தவித வருத்தமும் இன்றி முதல்வர் பதவியிலிருந்து விலகுகிறேன். தமிழகத்தின்முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் இடையறாதுபாடுபட்டு வந்துள்ளேன்.

அந்த மன நிறைவுடன் விலகுகிறேன். தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவேன்என்பதையும் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

பெரும் வாக்கு வித்தியாசத்தில் ஜெயா வெற்றி:

ஆண்டிப்பட்டியில் முதல்வர் ஜெயலலிதா 25,186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் சீமான் பெரும் தோல்வியடைந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முஸ்லீம் லீக்வேட்பாளர் தாவுத் மியா கான் தோல்வியைத் தழுவினார்.

அதே போல பாண்டிச்சேரியில் அம் மாநில முதல்வர் ரங்கசாமி 25,000 வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். அவர் தலைமையில் காங்கிரஸ்-திமுக கூட்டணிபெறும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அவரே மீண்டும் முதல்வராகவுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X