கிளம்பினார் அலெக்ஸ்- வருகிறார் முகர்ஜி
சென்னை:
டிஜிபி பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ள ஏ.எக்ஸ். அலெக்சாண்டர் இன்று தனதுபொறுப்புகளை ஒப்படைத்து விட்டு புதிய பொறுப்புக்கு சென்றார். புதிய டிஜிபியாகநியமிக்கப்பட்டுள்ள முகர்ஜி புதன்கிழமை பொறுப்பேற்கிறார்.
கருணாநிதி தலைமையிலான திமுக அமைச்சரவை பதவியேற்ற சில மணிநேரங்களில் தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் மாற்றப்பட்டனர்.அதிமுக ஆட்சியில் கிட்டத்தட்ட கட்சிக்காரர்கள் போலவே செயல்பட்டு இவர்கள்தங்களது பெயரைக் கெடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட திரிபாதி சனிக்கிழமை இரவே தனதுபொறுப்பை ஏற்றுக் கொண்டு, நாராயணனை கோட்டையில் இருந்து கிளப்பிவிட்டுவிட்டார்.
இந் நிலையில் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள முகர்ஜி புதன்கிழமைஅப்பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது. முகர்ஜி தற்போது டெல்லியில் சிபிஐகூடுதல் இயக்குனராக இருந்து வருகிறார்.
தமிழகப் பணிக்குச் செல்ல வசதியாக அவரை மத்திய அரசு விடுவிக்கவுள்ளது.
இதற்கிடையே அலெக்சாண்டர் இன்று தனது பொறுப்புகளை தற்காலிக டிஜிபிஜெயினிடம் ஒப்படைத்து விட்டு விடைபெற்றார்.
போலீஸ் அகாடமியின் சிறப்பு அதிகாரி என்ற அதிகாரமில்லாத பதவியில்அலெக்சாண்டர் பணியாற்றுவார். வரும் 31ம் தேதியோடு அவர் ஓய்வு பெறுவதும்குறிப்பிடத்தக்கது.
முகர்ஜி பொறுப்பேற்கும் வரை ஜெயினே சட்டம், ஒழுங்கு டிஜிபிக்கானபொறுப்புகளை தற்காலிகமாக கவனிப்பார் என்று உள்துறைச் செயலாளர் பவன்ரெய்னா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications