சபாநாயகராகிறார் வி.பி.துரைசாமி?
சென்னை:
திமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநயகர் வி.பி.துரைசாமி மீண்டும் சபாநாயகராகதேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணை சபாநாயகர் பொறுப்புகாங்கிரசுக்குத் தரப்படும் என்று தெரிகிறது.
தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்டி.சுதர்சனம் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் செவ்வாய்க்கிழமை ஆளுநர் பர்னாலா முன்னிலையில் பதவிப் பிரமாணம்எடுக்கிறார். அதைத் தொடர்ந்து 17ம் தேதி சட்டசபை கூடுகிறது. அப்போது புதியஉறுப்பினர்களுக்கு சுதர்சனம் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
இதைத் தொடர்ந்து வரும் 19ம் தேதி காலை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வுநடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் சங்ககிரி தொகுதியிலிருந்துதேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைசாமி சபாநாயகர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றுகூறப்படுகிறது.
இவரைத் தவிர ஆவுடயைப்பன், கருப்பசாமி பாண்டியன், ராஜ கண்ணப்பன்,கு.பிச்சாண்டி ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.
துணை சபாநாயகர் பொறுப்பு காங்கிரசுக்கு விட்டுத் தரப்படும் என்றும் கூறப்படுகிறது.
வி.பி.துரைசாமி கடந்த 1989 முதல் 91 வரை ஆட்சிப் பொறுப்பில் திமுகஇருந்தபோது சபாநாயகராக இருந்தவர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications