ஜெயா நியூஸ் சேனலுக்கு மத்தியஅரசு அனுமதி
சென்னை:
ஜெயா டிவியின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள ஜெயா பிளஸ் என்ற செய்தி சேனலுக்குமத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
ஜெயா டிவியை நடத்தி வரும் மாவிஸ் சாட்காம் நிறுவனம் செய்தி அலைவரிசைஒன்றைத் தொடங்குகிறது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்ட அந் நிறுவனம் நேரடிஒளிபரப்புக்கான கருவிகளையும் நிறுவியது. இருப்பினும் மத்திய அரசின் தகவல்,ஒளிபரப்பு அமைச்சகம், நேரடி ஒளிபரப்பை மேற்கொள்வதற்கான உரிமத்தைவழங்காமல் இருந்தது.
இதையடுத்து மாவிஸ் சாட்காம் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் காலக் கெடுஒன்றை மத்திய அரசுக்கு நிர்ணயித்து அதற்குள் ஜெயா டிவியின் கோரிக்கையைபரிசீலிக்குமாறு மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது.
இந் நிலையில் ஜெயா பிளஸ் டிவிக்கான உரிமத்தை மத்திய தகவல் ஒளிபரப்புஅமைச்சகம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஜெயா டிவியின் நிர்வாகம் மற்றும் சட்டப் பிரிவு துணைத் தலைவர்ரங்கநாதன் மும்பையில் கூறுகையில்,
ஜெயா பிளஸ் செய்தி சேனலை தொடங்க தகவல், ஒளிபரப்பு அமைச்சகம் அனுமதிகொடுத்து விட்டது. விரைவில் செய்தி அலைவரிசை தொடங்கப்படும் என்றார்.
தமிழில் தற்போது சன் டிவி மட்டுமே 24 மணி நேர செய்தி சேனலை நடத்தி வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பாஜக ஆட்சியிலேயே செய்தி சேனலுக்கான அனுமதி பெறும் முயற்சிகளில்ஜெயலலிதா இறங்கினார். ஆனால், அந்த டிவியின் நிர்வாகி என்ற வகையில் தினகரன்எம்பி மீது அன்னிய செலாவணி விவகாரம் நிலுவையில் இருந்ததால், அந்தஅனுமதியைத் தர உள்துறை அமைச்சக அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து தினகரனை ஒதுங்க வைத்துவிட்டு புதிய விண்ணப்பம் செய்யப்பட்டுஇப்போது அனுமதியை வாங்கியுள்ளது ஜெயா டிவி என்கிறார்கள் உள் விவரம்அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications