கவலைக்கு மருந்து தற்கொலை அல்ல: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கவலைக்கு மருந்து தற்கொலை அல்ல. துணிச்சல் தான் என்று மாஜி முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த கவலையிலும் அதிர்ச்சியிலும் கழக உடன் பிறப்புக்கள்,விலை மதிக்க முடியாத தங்கள் உயிரை மாய்த்து வருவது எனக்கு பெரும் துயரத்தைத் தருகிறது.

இதுவரை மொத்தம் 32 பேர் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்த கவலையில் மாண்டு போயிருக்கிறார்கள் என்றசெய்தி கேட்டு ஆறா துயரம் அடைகிறேன்.

எத்தனை கவலைகள் இருந்தாலும் தற்கொலை செய்வது பிரச்சனைக்கு தீர்வாகாது. தற்கொலை செய்துகொள்வோர் அவர்களது குடும்பங்களையும் அன்புக்குரிய உடன் பிறப்புக்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கவலைக்கு மருந்து தற்கொலை அல்ல. துணிச்சல் தான். அந்தத் துணிச்சல் கழக உடன் பிறப்புக்கள்அனைவருக்கும் இருக்க வேண்டும்.

உங்கள் அன்புச் சகோதரியாக என்னைவிட சோதனைக்கு உள்ளானவர்கள் யார்? கவலைகளுக்குஆட்பட்டவர்கள் யார்?. அனைத்தையும் வெற்றி கொண்டு உங்களுக்காகவே நான் வாழ்ந்து வருவதை நீங்கள்அறிவீர்கள். இந்த நாடும் அறியும்.

போராட்டங்கள் நமக்கு புதிதா? இதுவரை வென்ற நாம் இனியும் வெல்வோம். எதிர்காலம் நமக்கே.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+