சட்டசபை: கருணாநிதி-எம்எல்ஏக்கள் பதவியேற்பு
சென்னை:
சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர்.
தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக டி.சுதர்சனம் நேற்று மாலைபதவியேற்றார்.
ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பர்னாலா, சுதர்தனத்துக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டஅமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து இன்று காலை சட்டசபை கூடியது. அதன் பின்னர் புதிய உறுப்பினர்கள்பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது.
முதல் உறுப்பினராக முதல்வர் கருணாநிதி பதவியேற்றார். அவருக்கு தற்காலிகசபாநாயகர் சுதர்சனம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
![]() |
| முதல்வர் கருணாநிதி, ஆளுநர் பர்னாலாவுடன் தாற்காலிக சபாநாயகர் சுதர்சனம் |
இதைத் தொடர்ந்து அமைச்சர்களும், திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கட்சிகளின் உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
ஆனால் மாஜி முதல்வர் ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட சில உறுப்பினர்கள்இன்று பதவியேற்கவில்லை. ஜெயலலிதா, சபாநாயகர் அறைக்குச் சென்றுபதவிப்பிரமாணம் எடுப்பார் என்று தெரிகிறது. அவர் சட்டசபைக்கு வர மாட்டார்என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய்காந்தும் நாளை பதவியேற்கக் கூடும்.
புதிய சபாநாயகர் தேர்வு 19ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட விரும்புபவர்கள்நாளை பிற்பகல் 12 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும். 19ம் தேதி காலை9.30 மணிக்கு தேர்தல் நடக்கும்.













Click it and Unblock the Notifications