அலெக்ஸ், சிவனாண்டி விரைவில் கைது?
சென்னை:
காவலர் தேர்வு வினாத்தாள்கள் பலமுறை அவுட் ஆன விவகாரத்தில் முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டரும்,முன்னாள் உளவுத்துறை டிஐஜி சிவணாண்டியும் கைதாவார்கள் என்று தெரிகிறது.
![]() |
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.இப்போது இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் சிலர், அலெக்ஸாண்டரால் தான் வினாத்தாள் லீக் ஆனது என்றுவாக்குமூலம் தந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான போலீஸ்காரர் ஜீவரத்தினம் ரயில் தண்டவாளத்தில் மர்மமானமுறையில் இறந்து கிடந்தார். அதற்கு சிவனாண்டியே காரணம் என்றும் இவர்கள் வாக்குமூலம் தந்துள்ளனர்.
அலெக்சிடம் டிரைவராக இருந்த ஜீவரத்தினத்தை விசாரிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் அவரைசிவனாண்டியே அடித்து, உதைத்தாகத் தெரிகிறது. இதையடுத்து ஜீவரத்தினம் தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால், அது தற்கொலை தானா என்று கூட காவல்துறையில் கேள்வி எழுப்பும் அதிகாரிகளும் இருக்கிறார்கள்.
![]() |
இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது இந்த வழக்கில் அறிக்கையைதாக்கல் செய்துவிட்டு அலெக்ஸாண்டரையும் சிவனாண்டியையும் தமிழக போலீசார் கைது செய்யவும்வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போது திருச்சி ஊர்காவல் படை எஸ்.பியாக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ள சிவனாண்டி மெடிக்கல் லீவில்போய்விட்டது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications