ராமேஸ்வரத்திலிருந்து உமாபாரதி யாத்திரை
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்திலிருந்து கேதார் நாத் வரையிலான பாரதம் காப்போம் என்றயாத்திரையை முன்னாள் மத்தியப் பிரதேச மாநிலமுதல்வரும், முன்னாள் பாஜகமுக்கிய தலைவரும், இப்போது பாரதீய ஜன சக்தி கட்சியின் தலைவருமானஉமாபாரதி தொடங்கினார்.
பாஜகவிலிருந்து வெளியேற்றப்பட்ட உமாபாரதி பாரதீய ஜன சக்தி என்ற புதியகட்சியைத் தொடங்கியுள்ளார். அந்தக் கட்சியை வளர்ப்பதற்காக அவர் யாத்திரைகள்நடத்தி வருகிறார்.முதல் கட்டமாக ராமேஸ்வரத்திலிருந்து உத்தராஞ்சல் மாநிலம் கேதார்நாத் வரையிலும்யாத்திரை நடத்த முடிவு செய்த உமாபாரதி இதற்காக ராமேஸ்வரம் வந்தார்.அங்கிருந்து தனது யாத்திரையை தொடங்கினார்.
யாத்திரை தொடங்குவதற்கு முன்பு கோசாமி மடம், அத்திமர ஆஞ்சநேயர் கோவில்ஆகிய இடங்களில் வழிபட்டு, அக்னி தீர்த்த கடலில் நீராடினார் உமாபாரதி.
பின்னர் தனது யாத்திரையைத் தொடங்கினார். ராமேஸ்வரம் எல்லை வரைநடைபயணமாக வந்த அவருடன் ஏராளமான இந்து சமய பிரமுகர்கள், தொண்டர்கள்உடன் சென்றனர்.
அதன் பின்னர் உமாபாரதி தனது யாத்தியைை வேனில் தொடர்ந்தார்.
ஆந்திரம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் வழியாக உத்தராஞ்சல்மாநிலம் கேதார்நாத்தில் தனது யாத்திரையை முடிக்கிறார்.












Click it and Unblock the Notifications