For Daily Alerts
Just In
மேலும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை:
தமிழகத்தில் மேலும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதாரத் துறை செயலாளர் ஷீலா ராணி சுங்கத் நில அளவை மற்றும் தீர்வு இயக்குனர்மற்றும் சிறப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.லீனா நாயர் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளராகமாற்றப்பட்டுள்ளார்.
ஷீலாவும் லீனாவும் ஜெயலலிதா ஆட்சியில் கொடி கட்டிப் பறந்தவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. இப்போது முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்குமாற்றப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையராக சசிசேகர் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கனிம நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நந்தகிஷோர்நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக கே.ஏ.மாத்யூநியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வெடிபொருள் தொழில் நிறுவன நிர்வாக இயக்குனராககோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனராக ராஜாராம்நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments
Story first published: Sunday, May 21, 2006, 5:30 [IST]