கண்மாய் விழா நெரிசலில் சிக்கி ஒருவர் பலி
மதுரை:
மதுரை அருகே கள்ளந்திரி என்ற கிராமத்தில் கிராமத்து மீன் பிடி திருவிழாவில், கூட்டநெரிசலில் சிக்கி ஒருவர் பலியானார்.
தென் மாவட்டங்களில் உள்ள கண்மாய்கள், குளங்களில் கோடை காலத்தில் நீர்வற்றும். சுத்தமாக நீர் வற்றும் நிலையில் உள்ள கண்மாய்களில் ஊர் மக்கள்அனைவரும் குறிப்பிட்ட நாளில் இறங்கி மீன் பிடிப்பார்கள்.கள்ளழகர் கோலம் பூண்டு மதுரை சென்று வைகை ஆற்றில் அழகர் இறங்கி பின்னர்அழகர் கோவிலுக்கு சாமி திரும்பிய பின்னர் இந்த நிகழ்ச்சி நடக்கும்.
இந்த நிகழ்ச்சிக்கு கண்மாய் அழிக்கும் விழா என்று பெயர் சூட்டி ஜாதி, மத பாரபட்சம்இல்லாமல் அத்தனை பேரும் இறங்கி மீன் பிடிப்பார்கள்.
இதுபோன்ற நிகழ்ச்சி மதுரை அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி கிராமத்தில்,கண்மாய் அழிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் சுத்துப்பட்டு 150க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்கலந்து கொண்டனர்.
அதிகாலையே 30,000 பேர் வரை திரண்டு விட்டதால் அந்தப் பகுதி முழுவதும்மக்கள் கடலாக காட்சி அளித்தது. கையில் கிடைத்த வலைகள், சல்லடைகள் எனஏகப்பட்ட மீன் பிடி பொருட்களுடன் சிறுவர் முதல் வயோதிகர்கள் வரை திரண்டுமொத்தமாக கண்மாய்க்குள் இறங்கினர்.
இதனால் கண்மாய்க்குள் பெரும்கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில்சிங்கம்புணரி அருகே உள்ள சேத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த துரை என்ற 47 வயதுநபர் பரிதாபமாக இறந்தார். மேலும் 3 பேர் மயக்கமடைந்து பத்திரமாகமீட்கப்பட்டனர்.
உயிரிழப்பு ஏற்பட்டாலும் கூட மக்கள் கண்மாயில் இருந்த மீன்கள் முழுவதையும்பிடித்த பின்னரே வெளியேறினர்.












Click it and Unblock the Notifications