அரசு மரியாதையுடன் பிடிஆர் உடல் இன்று தகனம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மறைந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் உடல் முழு அரசு மரியாதைகளுடன் இன்று தகனம்செய்யப்படுகிறது.
அறநிலையத்துறை அமைச்சரான பிடிஆர் நேற்று முன் தினம் மதுரைக்கு ரயிலில் வரும்போது உயிரிழந்தார்.அவரது உடலுக்கு நேற்று முதல்வர் கருணாநிதி உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று அமைச்சர்கள் அன்பழகன், ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பிடிஆரின் ஒரே மகனான தியாகராஜன் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் வேலை விஷயமாக ஜப்பான்சென்றிருந்த நிலையில் பிடிஆர் மரணமடைந்தார்.
இகையடுத்து அவர் இன்று தான் மதுரை வருகிறார். அவர் வந்த பின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுமதுரை தத்தனேரி இடுகாட்டில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications