மேலும் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை:
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு புதிய ஆட்சித் தலைவர்கள்நயமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக மேலும் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராக பிரகாஷ், பெரம்பலூர் ஆட்சித்தலைவராக அனில் மெஷ்ராம், கிருஷ்ணகிரி ஆட்சித் தலைவராக டாக்டர்சந்தோஷ்பாபு, புதுக்கோட்டை ஆட்சித் தலைவராக சுங்சோங்கம் சதக் சிரு ஆகியோர்நியமிக்கப்பட்டுள்ளனர்.மோமகன் வர்கீஸ் சுங்கத் மீன்வளத்துறை சிறப்பு ஆணையராகவும், கோவிந்தன்மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் துறை சிறப்பு ஆணையர் மற்றும்இயக்குனராகவும், ராஜ்குமார் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துத் துறை ஆணையராக சிவக்குமார், ஆதிதிராவிட நலத்துறைஇயக்குனராக தங்க கலியபெருமாள், போக்குவரத்துத் துறை இணைச் செயலாளராகமுகம்மது அஸ்லம், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை இணை ஆணையராகவெங்கடேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மகளிர் மேம்பாட்டுக் கழக தலைவராக சூசன் மேத்யூவும், மகளிர் மேம்பாட்டுக் கழகநர்வாக இயக்குனராக முருகானந்தமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.