பிரபல வழக்கறிஞர் வானமாமலை மரணம்
சென்னை:
தமிழகத்தின் பிரபல வழக்கறிஞரான என்.டி.வானமாமலை மரணம் அடைந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றியவர் என்.டி.வி. எனஅழைக்கப்பட்ட வானமாமலை. 84 வயதான அவர் உடல் நலக்குறைவினால்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்றுகாலை நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை சென்னையில்சட்டம் பயின்றார். பிரபல வழக்கறிஞர் கே.டி.பாலாஜியிடம் ஜூனியராகபணியாற்றிய பின்னர் தனியாக தொழிலை மேற்கொண்டார்.
தமிழகத்தை உலுக்கிய பல்வேறு பிரபல வழக்குகளில் ஆஜராகிய பெருமைபடைத்தவர் வானமாமலை.
எம்.ஜி.ஆரை எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்ட வழக்கில் ராதாவுக்காக ஆஜராகிவாதாடினார். மதுரை தூக்குமேடை பாலு வழக்கு, நெல்லை சதி வழக்கு, சீக்கியர்கலவரம் தொடர்பான வழக்கு என பல்வேறு பிரபலமான வழக்குகளில் ஆஜராகியவர்வானமாமலை.
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார்.கட்சியில் பல்வேறு பொறுப்புகளையும் ஏற்றுள்ளார்.
தொழிலாளர்களின் பாதுகாவலராக திகழ்ந்து வந்த வானமாமலை தன்னைத் தேடி வந்தஅட்வகேட் ஜெனரல் பதவியையும் இதற்காகவே வேண்டாம் என்று உதறியவர்.
தற்போதைய உயர்நீதிமன்ற நீதிபதிகள் அசோக்குமார், ரகுபதி, பாஷா ஆகியோர்வானமாமலையின் ஜூனியர்களாக இருந்தவர்கள்.
வானமாமலை மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் ஆகியோர் இரங்கல்தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications