ஜெயேந்திரர்-கோ.சி.மணி சந்திப்பு: கருணாநிதி அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரை தமிழக அமைச்சர் கோ.சி.மணி திடீர் எனசந்தித்துப் பேசினார்.

இச் சந்திப்பின்போது திமுகவைச் சேர்ந்த மேலும் சில முக்கியப் பிரமுகர்களும் உடன்இருந்தனர்.

சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் விடுதலையாகி இருக்கும்ஜெயேந்திரர் கும்பகோணம் வந்தார். அங்கு நடந்த காஞ்சிப் பெரியவரின் படுகபட்டாபிஷே கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.

இதற்காக மட சாலையில் அமைந்துள்ள சங்கர மடத்தில் அவர் தங்கியிருந்தார்.அப்போது அமைச்சர் கோ.சி.மணி உள்ளிட்ட திமுக குழுவினர் ஜெயேந்திரரைசந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசினர்.

அவர்களது சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்று தெரியவில்லை.

ஜெயேந்திரரை சந்திப்பதற்காகவே கோ.சி.மணி சென்னையிலிருந்து கும்பகோணம்வந்ததாக திமுக தரப்பினர் தெரிவித்தனர்.

கோ.சி.மணிக்கும், திமுகவினருக்கும் மடத்தின் ஊழியர்கள் உற்சாகமான வரவேற்புகொடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.

இந்தச் சந்திப்பு குறித்து முதல்வர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,

இந்த செய்தி எனக்கே ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.கோ.சி.மணியிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்பேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+