300 நாட்கள், 100 அடி, மேட்டூர் சாதனை!
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 300 நாட்களாக 100 அடியாக தொடர்ந்துஇருந்து புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த கன மழையால் மேட்டூர் அணை மொத்தம் 3முறை நிரம்பி புதிய சாதனை படைத்தது. அணையின் முழுக் கொள்ளளவான 120அடியில் மொத்தம் 80 நாட்கள் இருந்து மேலும் வரலாறு படைத்தது.இந் நிலையில் 100 அடிக்குக் குறையாமல் மேட்டூர் அணையின் நீர் மட்டம் இருப்பதுநேற்றுடன் 300வது நாளைத் தொட்டது. இது மேட்டூர் அணையின் வரலாற்றில் புதியசாதனையாகும்.
தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால்அணைக்கு வினாடிக்கு 1500 கன அடிநீர் வந்து கொண்டுள்ளது. அணையின்தற்போதைய நீர் இருப்பு 115 அடியாக உள்ளது.
ஜூன் 12ம் தேதி அணை திறக்கப்படவுள்ள நிலையில் கடந்த 300 நாட்களாக 100அடிக்குக் குறையாமல் நீர்மட்டம் இருந்து வருவது காவிரிப் பாசனப் பகுதிவிவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் இருப்பதால் இந்த ஆண்டு குறுவைசாகுபடியை மட்டுமல்லாது தொடர்ந்து வரும் சம்பா சாகுபடியையும் சிறப்பாகமேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications