ரகளை செய்யும் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து: முஸ்லீம் லீக் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபையில் ரகளையில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொஹைதீன்கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபைக்குள் ரகளையில்ஈடுபடாமல் அவையின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் அரசியல் கட்சிகள்செயல்பட வேண்டும்.சட்டசபைக்கு உள்ளே, ஜனநாயக மாண்புகளைக் காக்காமல், அமளிதுமளி,ரகளையில், வன்முறையில் ஈடுபடும் வகையில் செயல்படும் கட்சிகளின்அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி. பாகுபாடுபார்க்காமல் நடவடிக்கை எடுத்தால்தான் சட்டசபையின் மாண்புகள் பாதுகாக்கப்படும்.
சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழக்க விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடுவழங்க நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல 27 சதவீத இட ஒதுக்கீட்டை மிகவும்கவனமாக மத்திய அரசு கையாள வேண்டும் என்றார் காதர் மொஹைதீன்.












Click it and Unblock the Notifications