27% ஒதுக்கீடு ஏமாற்று வேலை- அப்துல்ரகுமான்
சென்னை:
உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில்போராட்டம் நடந்தது.
அதில் கவிஞர் அப்துல் ரகுமான் பேசியதாவது:
இட ஒதுக்கீட்டை ஏற்கனவே அனுபவித்து வரும் ஓரளவு வசதியுள்ள குடும்பங்களுக்கு அளிக்கக் கூடாது என்றுசிலர் பேசுகிறார்கள். இது சமத்துவமாம்.
![]() |
ஐயாயிரம் ஆண்டுகளாக எல்லா வசதிகளையும் அனுபவித்து வருபவர்களின் பிள்ளைகளுக்கு அடுத்த ஐயாயிரம்ஆண்டுகளுக்கு இடமே கொடுக்கக் கூடாது. அப்போது தான் உண்மையான சமத்துவம் வரும். இதை அவர்கள்ஏற்பார்களா?
ஐயாயிரம் வருடமாய் முடமாகிக் கிடப்பவனை, என்னோடு சமமாய் ஓடி வா என்று சொன்னால் எப்படி ஓடமுடியும்.
அறிவியல்பூர்வமாகவே ஐயாயிரம் ஆண்டுகளாக படித்து வரும் ஒருவனின் குழந்தை ஜீன் மூலமாக அறிவாற்றல்பெறும். அது அதிசயமல்ல. ஐயாயிரம் ஆண்டுகளாய் படிக்காதவனின் பிள்ளை அறிவாற்றலோடு சிந்திப்பது தான்அதிசயம்.
27 சதவீதம் என்று சொல்வதே முதலில் பெரிய ஏமாற்று வேலை. ஆதிக்க சாதியினர் இந்த நாட்டில் மொத்தம் 2.1சதவீதம் தான் உள்ளனர்.
வீட்டுக்காரனிடம் பிச்சைக்காரன் பிச்சை கேட்கலாம். பிச்சைக்காரனிடம் வீட்டுக்காரன் பிச்சை கேட்கலாமா?என்றார் அப்துல் ரகுமான்.
இக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் , நக்கீரன கோபால் உள்ளிட்டவர்களும் பேசினர்.இதற்கிடையே இட ஒதுக்கீட்டுக்கு எதிராக டெல்லி மற்றும் குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் சில நகர்களில்ஒரு பிரிவு மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கொண்டுள்ளனர்.
இந் நிலையில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான போராட்டங்களும் மும்பையில் ஆரம்பித்துள்ளன. இன்று காலைஇட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மும்பையில் தர்ணாவில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.













Click it and Unblock the Notifications