கட்டுப்பாட்டை இழந்த பஸ்: ஆட்டோ, வேன், கார், பைக்குகள் மீது மோதல்- ஒருவர் பலி
பாண்டிச்சேரி
பாண்டிச்சேரியில் தனியார் பஸ் ஒன்று கட்டுபாட்டை இழந்து ஒடியதில் சென்னையை சேர்ந்த வாலிபர்பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் 10 வாகனங்கள் நொறுங்கின. 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாண்டிசேரியில் கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை முன்பு இருந்து பாண்டிச்சேரி பஸ் நிலையம் நோக்கி ஒருதனியார் பஸ் புறப்பட்டு வந்தது. பஸ் கோரிமேடு காவல் நிலையம் அருகே வந்தபோது பஸ் டிரைவர்கட்டுப்பாட்டை இழந்தார்.ரோட்டில் அங்கும் இங்குமாக படு வேகத்தில் ஒடிய பஸ் கஸ்தூரி பாய் நகர் பகுதியில் வந்தபோது மோட்டார்சைக்கிளில் எதிரே வந்த ஒருவர் மேல் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலே இரத்தவெள்ளத்தில் உயிர் இழந்தார். அவர் சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் (28) என்பதுதெரியவந்தது.
மேலும் பேருந்து மோதியதில் 2 கார்கள், ஒரு ஆட்டோ, ஒரு டெம்போ, 5 மோட்டர் சைக்கிள்கள், ஒருஆம்புலன்ஸ் ஆகியவை சேதம் அடைந்தன.
பின்பு ஒரு வழியாக பஸ் ரோட்டின் ஒரத்தில் இருந்த தடுப்புசுவரின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் மேலும்4 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவத்தையடுத்து பஸ் டிரைவர் தப்பியோடிவிட்டான்.












Click it and Unblock the Notifications