கடனுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை: கை கழுவினார் அன்பரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை பைனான்சியரிடம் எனது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் ரூ. 35 லட்சம்பணத்தை கடனாகப் பெறவில்லை, இதுதொடர்பாக எந்தக் காசோலையும் தரவில்லை.அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமே கிடையாது என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி.அன்பரசு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், முகுல்சந்த் போத்ரா என்பவரிடம்நானும், எனது குடும்பத்தினரும் ரூ. 35 லட்சம் பணத்தை கடனாக வாங்கியதாகவும்,அதைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் போத்ரா என்பவர் புகார்கூறியுள்ளார்.

மேலும், இந்த கடன் தொகைக்காக நாங்கள் காசோலை கொடுத்ததாகவும், அது பணம்இல்லாத காரணத்தால் திரும்பி வந்து விட்டதாகவும் கூறி சென்னை எழும்பூர் 8வதுகுற்றவியல் நீதிமன்றத்தில் மோசடி வழக்கையும் அவர் தொடர்ந்துள்ளார்.

போத்ரா யார் என்றே எங்களுக்குத் தெரியாது. நேரில் பார்த்ததும் கிடையாது. எந்தக்கடனையும் நாங்கள் வாங்கவும் இல்லை. இந்த நிலையில் காசோலையை எப்படிநாங்கள் கொடுத்திருக்க முடியும்?

இந்த வழக்கு அப்பட்டமான பொய் வழக்கு. அரசியல் ரீதியாக எங்களைக்களங்கப்படுத்தி, பயமுறுத்தி, பணம் பறிக்கும் உள்நோக்கத்தோடு இந்த பொய் வழக்குதொடரப்பட்டுள்ளது.

இவருடைய மோசடி நடவடிக்கைகளை முறியடிக்க சட்டப்படி நாங்கள் நடவடிக்கைஎடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார் அன்பரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+