டாவின்சி கோட் படத்தை தடை எஸ்றா சற்குணம் கோரிக்கை
சென்னை:
தி டாவின்சி கோட் படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று முதல்வர்கருணாநிதிக்கு பேராயர் எஸ்றா சற்குணம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பரான சற்குணம் இதுதொடர்பாக அவருக்குஎழுதியுள்ள கடிதத்தில்,கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தக் கூடிய வகையில்இந்தப் படம் அமைந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
இப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டால் நிச்சயம் தமிழகத்தில் வாழும் ஒரு கோடிகிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் மன வேதனைக்குள்ளாவார்கள்.
மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்து சுதந்திரம் இருக்கக் கூடாது.இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் இளைஞர்களின் மனதைப் பாதிக்கக்கூடும். எனவே இப்படத்தை தமிழகத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும்.
இதுதொடர்பாக நானும், பல்வேறு சிறுபான்மை அமைப்புகளைச் சேர்ந்தபிரதிநிதிகளும் தங்களை நேரில் சந்தித்து முறையிட விழைகிறோம், எனவேசந்திப்புக்கு தாங்கள் நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்று கூறியுள்ளார் சற்குணம்.












Click it and Unblock the Notifications