போலீஸ்காரர் சாவு-சிபிசிஜடி வலையில் சிவனாண்டி
சென்னை:
காவலர் கேள்வித்தாள் வெளியான வழக்கில் தொடர்புடைய போலீஸ்காரர் ஜீவரத்தினம் மர்மமான முறையில்இறந்தது தொடர்பாந வழக்கு முறைப்படி சிபிசிஜடி போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் பதவியிறக்கம்செய்யப்பட்ட சிவனாண்டிக்கு மேலும் சிக்கல் எற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு காவலர் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியானது. இது தொடர்பாக போலீசார் நடத்தியவிசாரணையில் டி.ஜி.பி அலெக்ஸாண்டரின் ஆர்டலியாக இருந்த ஜீவரத்தினத்திற்க்கு தொடர்பு இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவரை உளவுத்துறை டி.ஜ.ஜியாக இருந்த சிவனாண்டி விசாரித்தார். அப்போது ஜீவரத்தினத்தைசிவனாண்டி அடித்து உதைத்ததாகவும் கடுமையாக மிரட்டியதாகவும் கூறப்பட்டது.
இந் நிலையில் திடீரென ஜீவரத்தினத்தின் உடல் கிண்டி அருகே ரயில் பாதையில் மர்மமான முறையில் கிடந்தது.அவர் தற்கொலை செய்து கொண்டதாக கேஸை மூடியது அரசு.
இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு நேற்று சிபிசிஜடி ஜ.ஜி துக்கையாண்டியிடம்ஒப்படைக்கப்பட்டது.
கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஜடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார்விசாரித்து வந்தனர். இது தொடர்பாக 11 போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்களை பெங்களூர் அழைத்துச்சென்று நார்கோ அனாலிஸிஸ் மூலம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
அந்த விசாரணையின் போது சிவனாண்டியின் பயங்கர டார்ச்சர் காரணமாகதான் ஜீவரத்தினம் இறந்ததாகஅவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கேள்வித்தாள் விவகாரத்தை மூடி மறைப்பதற்காகவே வழக்கில்தொடர்புடைய போலீஸ்காரர்களை சிவனாண்டி தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவர்கள் வாக்குமூலம்அளித்துள்ளனர்.
இப்போது ஜீவரத்தினம் மர்மச் சாவு வழக்கு சிபிசிஜடி வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் சிவனாண்டி பெரும்சிக்கலில் மாட்டப் போகிறார் என்கிறார்கள்.
தமிழக அரசு நடவடிக்கை தவறு-மத்திய அரசு:
இதற்கிடையே டிஐஜி பதவியிலிருந்து சிவனாண்டியை பதவி இறக்கம் செய்தது தவறு. இந்த விஷயத்தில் தமிழக அரசு அத்துமீறி செயல்பட்டுள்ளதாக சென்னைஉயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எஸ்.பி.யாக இருந்த சிவனாண்டி கடந்த 1995ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி அந்தஸ்து கொடுக்கப்பட்டது. அவருடன் ஆவுடையப்பன் என்பவருக்கும் ஐ.பி.எஸ்.அதிகாரி அந்தஸ்து கிடைத்தது. இதையடுத்து இருவரது பெயர்களும் சீனியாரிட்டி பட்டியலில் இடம்பெற்றன.
இதை எதிர்த்து ஐந்து காவல்துறை அதிகாரிகள் மத்திய தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்களது சீனியாரிட்டியை புறக்கணித்து விட்டு இருவரதுபெயர்களும் சீனியாரிட்டி பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக அவர்கள தெரிவித்திருந்தனர்.
வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், அந்த சீனியாரிட்டி பட்டியலை ரத்து செய்து புதிய பட்டியலைத் தயாரிக்குமாறு உத்தரவிட்டது.
ஆனால் இந்த் தீர்ப்பைத் தொடர்ந்து புதிதாக வந்த திக ஆட்சி, சிவனாண்டியை பதவி இறக்கம் செய்து எஸ்.பி. ஆக்கி திருச்சி ஊர்க்காவல்படைக்குமாற்றியது.
இப்பொறுப்பை ஏற்காமல் சிவனாண்டி மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். மேலும் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய மற்றும் மாநில அரசின் உள்துறைச் செயலாளர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்பியிருந்தது.
நேற்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் நீதிபதிகள் கிருஷ்ணன், சுதாகர் ஆகியோர் முன்பு பதில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், சிவனாண்டியை பதவி இறக்கம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த விஷயத்தில் தமிழகஅரசு அத்துமீறி செயல்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிவனாண்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன், பதவி இறக்கம் செய்யப்பட்ட சிவனாண்டியை தற்போது வழங்கிய பணியில் சேருமாறு தமிழகஅரசு வற்புறுத்தி வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து நீதிபதிகள், தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விடுதலையிடம் கேட்டபோது, பதவி இறக்கம் செய்யப்பட்ட பணியில்சேருமாறு சிவனாண்டியை வற்புறுத்த மாட்டோம் என உறுதி அளித்தார்.
இதையடுத்து கடந்த 15ம் தேதி தமிழக அரசு பிறப்பித்தி உத்தரவின் கீழ் பணியில் சேர வேண்டும் என்று சிவனாண்டியை தமிழக அரசு வற்புறுத்தக் கூடாதுஎன்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் விசாரணையை ஜூன் 17ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.