மோசடி மன்னன் ஆதிகேசவன் ஜாமீனில் விடுதலை
சென்னை:
![]() |
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஆதி கேசவன். நடமாடும் நகைக் கடையாகவலம் வந்த ஆதிகேசவன் ஒரு நாள் போலீஸில் சிக்கினார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் கடன் வாங்கித் தருவதாக கூறிநூற்றுக்கணக்கானவர்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை கமிஷனாகப் பெற்றுமோசடி செய்ததாக ஆதிகேசவன் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது 50க்கும்மேற்பட்டோர் புகார் கொடுத்தனர்.
ஆதியை சிறையில் அடைத்த போலீஸார் அவர் மீது 38 வழக்குகளைப் பதிவுசெய்தனர். அவர் தவிர மகன், அண்ணன் மகன் உள்பட மேலும் 9 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த வழக்குகள் தவிர குண்டர் சட்டத்தின் கீழும் ஆதி உள்ளே தள்ளப்பட்டார்.
குண்டர் சட்டத்தில் தன்னைக் கைது செய்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை ஆதி அணுகினார். அங்கு அவரது கோரிக்கை ஏற்கப்பட்டுகாவல்துறையின் நடவடிக்கையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் மற்ற வழக்குகளில் ஜாமீன் பெற ஆதி தரப்பு விரைவான நடவடிக்கையைஎடுத்தது.
38 வழக்குகளிலும் ஆதியை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி அவரதுவழக்கறிஞர்கள் சென்னை எழும்பூர் தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி கணேசன், அனைத்துவழக்குகளிலும் ஆதிக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
தலா ரூ. 1 லட்சம் மற்றும் இரு நபர் பிணையத்தின் பெயரில் அவருக்கு ஜாமீன்வழங்கப்பட்டது.
இதன் மூலம் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்து விட்டதால் சிறையிலிருந்துவிடுவிக்கப்பட்டார் ஆதி.
தற்போது அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் சிறுநீரக கோளாறு காரணமாகசிகிச்சை எடுத்து வருகிறார்.













Click it and Unblock the Notifications