குற்றாலத்தில் வெள்ளம்; அருவியில் குளிக்கத் தடை
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
![]() |
நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செங்கோட்டை, குற்றாலம், தென்காசிஉள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
குற்றால மலையில் கன மழை பெய்து வருவதால் மெயின் அருவியில் பெரும்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பேரிரைச்சலுடன் அருவியில் நீர் கொட்டி வருகிறது. அபாய வளைவைத் தாண்டியும்தண்ணீர் பெருவெள்ளமாக கொட்டுவதாலும், கற்கள் உள்ளிட்டவை தண்ணீருடன்கலந்து வருகின்றன என்பதாலும் அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு போலீஸார்தடை விதித்துள்ளனர்.
இருப்பினும் ஐந்தருவி உள்ளிட்ட பிற அருவிகளில் தண்ணீர் அபாய அளவுக்குஉட்பட்டதாகவே கொட்டுவதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்படவில்லை.
தொடர்ந்து குற்றாலத்தில் சாரல் மழையும் பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள்குற்றாலத்திற்குப் படையெடுத்து வருகின்றனர்.













Click it and Unblock the Notifications