பிடிஆர் வீட்டில் வைகோ-துக்கம் விசாரித்தார்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மறைந்த தமிழக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் வீட்டுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்று அவரது மனைவியிடம் துக்கம் விசாரித்தார்.
தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ஒரே வாரத்தில்பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.இந்த நிலையில் மதுரையில் உள்ள அவரது வீட்டுக்கு வைகோ சென்றார். அவருடன்மதிமுக எம்.எல்.ஏ. வீர இளவரசன் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகளும் சென்றனர்.
பி.டி.ஆரின் மனைவியை சந்தித்த வைகோ, அவருக்கும், குடும்பத்தினருக்கும்ஆறுதல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications