ஒளிமயமான எதிர்காலம்: விஜயகாந்த் நம்பிக்கை
சென்னை:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறதுஎன்று அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் விஜயகாந்த் கட்சியில் அதிமுக, பாஜக, மதிமுககட்சிகளைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் சேர்ந்து வருகிறார்கள். இன்று கடலூர்மாவட்டம் நெல்லிக்குப்பம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.துரை அன்பரசன் விஜயகாந்த்தை சந்தித்து அவரது கட்சியில் இணைந்தார்.அவருடன் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட திமுக மற்றும்அதிமுகவைச் சேர்ந்தவர்களும் தேமுதிகவில் இணைந்தனர்.
அனைவரையும் விஜயகாந்த் வரவேற்று வாழ்த்தினார். அப்போது அவைத் தலைவர்பண்ருட்டி ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ராமு வசந்தன் உள்ளிட்டோர் உடன்இருந்தனர்.
கட்சியில் சேர்ந்தவர்களிடையே விஜயகாந்த் பேசுகையில்,
தேமுதிகவுக்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றுக்கு கட்டுப்படுபவர்கள்தான்இந்தக் கட்சியில் நீடிக்க முடியும். நீங்களும் அப்படியே நடந்து கொள்வீர்கள் எனநம்புகிறேன்.
உறுப்பினர் அட்டை கூட நமது கட்சியினர் பலரிடம் இல்லை. அப்படிப்பட்டநிலையில் நாம் சட்டசபைத் தேர்தலை சந்தித்தோம். கட்சிக்கு நல்ல எதிர்காலம்உள்ளது, பிரகாசமான, ஆரோக்கியமான எதிர்காலம் உள்ளது.
கட்சியை பலப்படுத்த கடுமையாக பாடுபடுங்கள். உள்ளாட்சித் தேர்தலில் இன்னும்சிறப்பான வெற்றியைப் பெறுவோம் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications