கருணாநிதி, இளங்கோவன் மீதான வழக்கு வாபஸ்
சென்னை:
முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மீதுகடந்த அதிமுக ஆட்சியில், டெஸ்மா சட்டத்தின் கீழ் போடப்பட்ட 3 வழக்குகள்வாபஸ் பெறப்பட்டுள்ளன.
முதல்வர் கருணாநிதி சமீபத்தில் சட்டசபையில் பேசுகையில், கடந்த ஆட்சியில்தலைவர்கள் மீது போடப்பட்ட டெஸ்மா, எஸ்மா வழக்குகள், அவதூறு வழக்குகள்அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்தார்.அந்த நடவடிக்கை தற்போது தொடங்கியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்கடந்த 2003ம் ஆண்டு நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்துஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துகருத்து வெளியிட்டனர். இதையடுத்து கருணாநிதியின் கருத்து அரசு ஊழியர்கள்போராட்டத்தைத் தூண்டி விடும் வகையில் இருப்பதாக கூறி அவர் மீது சென்னைஎழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் டெஸ்மா சட்டத்தின் கீழ் 2 வழக்குகள்போடப்பட்டன.
அதேபோல மத்திய இணை அமைச்சர் இளங்கோவன் மீதும் ஒரு வழக்கு இதேநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், அரசு வழக்கறிஞர் கந்தசாமிஎழும்பூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், கருணாநிதி,இளங்கோவன் மீதான 3 வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக தெரிவித்திருந்தார்.
இதை நீதிபதி பொறுப்பு வகிக்கும் கணேசன் ஏற்றுக் கொண்டு 3 வழக்குகளையும்வாபஸ் பெற அனுமதித்தார்.












Click it and Unblock the Notifications