For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 29ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஜெயலலிதா, சசிகலா, தினகரன், இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்தை மீறிசொத்து சேர்த்த வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர்பி.வி. ஆச்சார்யா,

சொத்துக் குவிப்பு வழக்கையும், லண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்கையும்இணைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கின் விசாரணை 24ம் தேதி வரும் எனத் தெரிகிறது.

எனவே சொத்துக் குவிப்பு வழக்கை அதுவரை ஒத்திவைக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிபதி சொத்துக் குவிப்பு வழக்கை வரும் 29ம்தேதிக்கு ஒத்திவைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X