திமுக ஆட்சிக்கு சபாநாயகர் புகழாரம்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
இந்தியாவிலேயே ஆட்சிக்கு வந்த 20 நாட்களில் அதிக அளவிலான வாக்குறுதிகளைநிறைவேற்றிய ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான் என்று சபாநாயகர் ஆவுடையப்பன்கூறியுள்ளார்.
நெல்லையில் 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசித் திட்டத்தை வண்ணாரப்பேட்டை ரேஷன்கடையில் தொடங்கி வைத்த ஆவுடையப்பன் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்து 20நாட்களாகிறது.அதற்குள் 58 வாக்குறுதிகளை கலைஞர் தலைமையிலான ஆட்சிநிறைவேற்றியுள்ளது. இது இந்தியாவிலேயே எங்கும் இதுவரை நடந்திராதது.
அதேபோல 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டம் இதுவரை இந்தியாவில்எந்த மாநிலத்திலும் அமல்படுத்தப்பட்டதில்லை. அந்த வகையில் இந்தியாவிலேயேபுதிய சரித்திரத்தை திமுக ஆட்சி படைத்துள்ளது என்றார் ஆவுடையப்பன்.












Click it and Unblock the Notifications