அதிமுக பிரமுகர் கொலை-6 அதிமுகவினர் சரண்
சென்னை:
சென்னை அம்பத்தூர் நகர அதிமுக செயலாளர் எம்.ஆர்.ரவி கொலை வழக்கில்அதிமுகவைச் சேர்ந்த வெள்ளை ரமேஷ என்பவர் உள்பட 6 பேர் வேலூர் மாவட்டம்ஆம்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சென்னை மேற்கு முகப்பேரில் வசித்து வந்தவர் ரவி. இவர் அம்பத்தூர் பகுதி அதிமுகசெயலாளராக இருந்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ரவி, கடந்தவெள்ளிக்கிழமை அம்பத்தூரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது ஒருகும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்தக் கொலைக்கு திமுகவினர்தான் காரணம் என்று குற்றம் சாட்டிய முன்னாள்முதல்வர் ஜெயலலிதா, ரவியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலிசெலுத்தினார்.
இந் நிலையில் ரவி கொலை தொடர்பாக விசாரித்து வந்த தனிப்படையினர் சென்னைபாடி பகுதியைச் சேர்ந்த அரசு என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தியவிசாரணையில் இந்தக் கொலையின் பின்னணியில் அரசியல் இல்லை என்றும்தொழில் முன் விரோதம் காரணமாகவே இந்தக் கொலை நடந்ததும் தெரிய வந்தது.
இந் நிலையில், ரவி கொலை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் வெள்ளை ரமேஷ்(வயது 23), பாபு (29), வெங்கட் (30), பார்த்திபன் (23), மைக்கேல் (21), கென்னடி(30) ஆகியோர் வழக்கறிஞர்கள் கண்ணன், பாரத் ஆகியோர் மூலமாக ஆம்பூர்குற்றவில் நடுவர் ராஜு முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி ராஜு உத்தரவிட்டர்.
இதையடுத்து இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அம்பத்தூர் உதவிகாவல் ஆணையர் தலைமையிலான தனிப்படை ஆம்பூர் விரைந்துள்ளது.
கோர்ட் அனுமதியுடன் 6 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து அம்பத்தூர் கொண்டுவந்து தீவிர விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அப்போதுதான்கொலை வழக்கின் முழுப் பின்னணியும் தெரிய வரும்.
இந்தக் கொலைக்கு முக்கிய மூளையாக இருந்து செயல்பட்டவர் வெள்ளை ரமேஷ்என்று போலீஸார் கூறியுள்ளனர்.
வெள்ளை ரமேஷுக்கும், ரவிக்கும் தொழில் போட்டி காரணமாக இருந்த முன்விரோதத்தால்தான் ரவி கொலை செய்யப்பட்டதாக சென்னை மாநகர காவல்துறைஆணையர் லத்திகா சரண் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications