ஜனனி கஞ்சா வழக்கு: இன்று மாலை தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை இளம் பெண் ஜனனி உள்ளிட்ட 3 பேர் மீது தொடரப்பட்ட கஞ்சா கடத்தல்வழக்கில் இன்று மாலை தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
மதுரை அன்பு நகரைச் சேர்ந்தவர் ஜனனி. இவரது தாயார் ரமீஜா. இவர்களது கார்டிரைவர் சதீஷ். இந்த மூன்று பேரும் கடந்த 2003ம் ஆண்டு காரில் கஞ்சா கடத்தியதாகமதுரை கருப்பாயூரணி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.3 பேர் மீதும் மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முழுவதுமாக முடிந்து இன்றைக்கு தீர்ப்புஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை ஜனனி உள்ளிட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.அப்போது நீதிபதி மாணிக்கம் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படும் எனஉத்தரவிட்டார்.
இதையடுத்து ஜனனி உள்ளிட்ட 3 பேரும் தங்களது வீடுகளுக்குப் புறப்பட்டுச்சென்றனர். கஞ்சா கடத்தல் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் பல பிறழ் சாட்சிகளாகமாறி விட்டதால் ஜனனிக்கு சாதகமாகவே தீர்ப்பு கிடைக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications