For Quick Alerts
For Daily Alerts
Just In
சாலை மறியல்: பாஜக தொண்டர்கள் கைது
திருச்சி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சாலை மறியல் செய்ய முயன்ற பாஜகதொண்டர்களை திருச்சியில் போலீஸார் கைது செய்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்தியா முழுவதும் இன்று பாஜகசார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. திருச்சியில் மெயின்கார்ட் கேட் பகுதியில,30க்கும் மேற்படட பாஜக தொண்டர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.மத்திய அரசின் போக்கைக் கண்டித்து போராட்டம் நடத்திய அவர்கள் மாநிலச்செயலாளர் பாலாஜி சிவராஜ் தலைமையில் சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர்.
மேலும், மாட்டு வண்டியில் ஒரு பைக்கை ஏற்றி அதை ஊர்வலமாகவும் செல்லமுயன்றனர்.
ஆனால் இதை போலீஸார் அனுமதிக்கவில்லை. தடையை மீற பாஜகவினர்முயன்றபோது அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அனைவரும்விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல கோவையிலும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Comments
Story first published: Wednesday, June 7, 2006, 5:30 [IST]