அதிமுக பிரமுகர் கொலை: கூலிப் படைத் தலைவன் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அம்பத்தூரில் அதிமுக பிரமுகர் எம்.ஆர்.ரவி கொலை செய்யப்பட்டவழக்கில் தொடர்புடைய கூலிப் படைத் தலைவன், நாகூர் மீரான் சென்னை கொரட்டூர்அருகே போலீஸாருடன் நடந்த மோதலின்போது சுட்டுக் கொல்லப்பட்டான்.

சென்னை கப்பேரில் சில நாட்களுக்கு முன்பு அம்பத்தூர் நகர அதிமுக செயலாளர்எம்.ஆர்.ரவி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாகபோலீஸார் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தேடி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக அரசு என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளை ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் ஆம்பூர் நீதிமன்றத்தில்சரணடைந்தனர். அவர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். கொலையைநேரில் பார்த்தவர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது 6 பேருக்கும் கொலையில் சம்பந்தம் இல்லாதது தெரியவந்தது. ஆனால் நாகூர் மீரான் என்பவர்தான் இந்த கொலையில் சம்பந்தப்பட்டமுக்கிய குற்றவாளி எனத் தெரிய வந்தது.

அவர் கூலிப் படைத் தலைவன் ஆவார். வியாசர்பாடியைச் சேர்ந்த நாகூர் மீரான் மீது 3கொலை வழக்கு, 30 க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில்உள்ளன. 4 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலும் இருந்துள்ளார்.

பணம் கொடுத்தால் கொலை செய்யக் கூடிய கூலிப் படைக்குத் தலைவனாக இருந்துவந்தார் நாகூர் மீரான். ரவியையும் இவர்தான் கொலை செய்ததாக போலீஸாருக்குத்தெரிய வந்ததும் அவரைப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர்.

கொரட்டூர் அருகே உள்ள மாதானம்குப்பம் என்ற இடத்தில் நாகூர் மீரான்பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அங்கே போலீஸார் சென்றனர்.

இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் நாகூர் மீரானை போலீஸார் சுற்றிவளைத்தனர். போலீஸாரைப் பார்த்த நாகூர் மீரான் அங்கிருந்து தப்ப முயன்றார்.கையில் இருந்த நாட்டு வெடிகுண்டை வீசினார். இதில் அந்த குண்டு வெடித்துச்சிதறியது. இதைப் பயன்படுத்தி நாகூர் மீரான் தப்ப முயன்றார்.

ஆனால் இன்ஸ்பெக்டர் சையத் ஜமால் நாகூர் மீரானை மடக்கிப் பிடிக்க முயன்றார்.அப்போது கையில் இருந்த அரிவாளால் ஜமாலை வெட்ட முயன்றார் நாகூர் மீரான்.இதையடுத்து கையில் இருந்த துப்பாக்கியால் நாகூர் மீரானை 2 முறை சுட்டார் ஜமால்.

இதில் சுருண்டு விழுந்து அந்த இடத்திலேயே இறந்தார் நாகூர் மீரான்.

இந்த மோதலில் இன்ஸ்பெக்டர்கள் ரங்கராஜன், அறிவுடை நம்பி ஆகியோருக்குலேசான காயம் ஏற்பட்டது.

சம்பவம் நடந்த இடத்திற்கு மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் நேரில்சென்று விசாரணை நடத்திதனார். இதற்கிடையே, தமிழகம் முழுவதும் கடந்த 2நாட்களில் மட்டும் 1000 ரவுடிகளை போலீஸார் பிடித்துள்ளனர். சென்னையில் மட்டும்300 பேர் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+