For Daily Alerts
Just In
நெஞ்சு வலி: மருத்துவமனையில் ஜெயலட்சுமி!
திருச்சி:
சிவகாசி ஜெயலட்சுமி நெஞ்சு வலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் டி.எஸ்.பி. ராஜசேகர் மனைவி விசலாட்சி தற்கொலை செய்து கொண்டவழக்கில் ஜெயலட்சுமிக்கும், ராஜசேகருக்கும் திண்டுக்கல் நீதிமன்றம் 7 ஆண்டுசிறைத் தண்டனை வழங்கியது.இதையடுத்து இருவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் இருந்த ஜெயலட்சுமிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்துஅவர் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, June 7, 2006, 5:30 [IST]