மகாஜனின் உதவியாளர், வேலைக்காரர் கைது
டெல்லி:
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ராகுல் மகாஜனின் முக்கிய உதவியாளரான ஹரீஷ் சர்மா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ராகுல் மீது போதைப் பொருள் உண்டது, வீட்டில் பதுக்கி வைத்தது, பிறருக்கும் வினியோகித்தது என மூன்றுபிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதையடுத்து அவர் நேற்று முதல்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந் நிலையில் அவரது முக்கிய உதவியாளரான ஹரீஷ் சர்மாவும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதைப்பொருளை அப்புறப்படுத்தி, சாட்சிகளை கலைத்ததாக கைதாகியுள்ளார். அதே போல வீட்டின் வேலைக்காரரானகணேஷ் என்பவரும் கைதாகியுள்ளார்.
ஹெராயின் உண்டு பலியான மொய்த்ராவைப் போலவே சர்மாவும் பிரமோத் மகாஜனிடம் உதவியாளராகஇருந்தவர்.
இந் நிலையில் டெல்லியில் மகாஜனுக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராஜ்யசபாஉத்தரவிட்டுள்ளது. வீட்டை மேலும் 6 மாதங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்குமாறு மகாஜன் குடும்பத்தினர்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications