பெட்ரோல்: 12ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வருகிற 12ம் தேதி மாவட்டத்தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காங்கிரஸ், திமுக தலைமையிலானமத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெட்ரோல் விலையை 4 ரூபாயும், டீசல்விலையை 2 ரூபாயும் அதிகரித்துள்ளது.இதன் மூலம் திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுமக்கள் விரோத அரசு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு 3 முறையும், 2005ம் ஆண்டு 2 முறையும் பெட்ரோல், டீசல்விலையை உயர்த்திய மத்திய அரசு இப்போது 6வது முறையாக பெட்ரோல், டீசல்விலையை உயர்த்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்என்பது மத்திய அரசுக்குத் தெரியும். அப்படி இருந்தும் விலையை உயர்த்தி அடித்தளதட்டு மக்களை சொல்லொணா துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தலின்போது ஓட்டுக்களைப் பெறுவதற்காக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தமாட்டோம் என்று கூறி விட்டு ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது போல தேர்தல்முடிந்தவுடன் விலையை உயர்த்தி ஏழை, எளிய மக்களின் துயரத்திற்கு துணை போனதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும்,காங்கிரஸ் கட்சியைப் போல கடுமையான கண்டனத்துக்குரியவையாகும்.
இந்த நிலையில், காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியின் மக்கள் விரோதப் போக்கைக்கண்டித்து போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே வருகிற 12ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் உள்ளமத்தியஅரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இந்தப் போராட்டத்தில் கூட்டணிக் கட்சிகளான மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்,இந்திய தேசிய லீக், ஐஎன்டியூசி தொழிற்சங்கம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம்உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் கலந்து கொள்ளும்.
அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தவிர பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications