அர்ச்சகர் சட்டம்: தஞ்சையில் கருணாநிதிக்கு விழா
தஞ்சாவூர்:
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவைப் பிறப்பித்ததற்காகமுதல்வர் கருணாநதிக்கு தஞ்சையில் வரும் 12ம் தேதி பாராட்டு விழாநடத்தப்படவுள்ளதாக திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,973ம் ஆண்டு பெரியார் மறைந்தார். அவரது இறுதி மரியாதைகள்நிறைவேற்றப்பட்டன. அப்போது பெரியாரின் இறுதி விருப்பமான அனைத்துசாதியினரும் அர்ச்சர்களாக செயல்படும் உரிமையினை செயல்படுத்துவேன் என்றுகருணாநிதி கூறினார்.
அதை இப்போது செயல்படுத்தியுள்ளார். பெரியாரின் கனவை கருணாநிதிநினவாக்கியுள்ளார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்றஉரிமையைப் பெற்றுத் தந்த கருணாநிதியை பாராட்டும் முகமாக தஞ்சை திலகர்திடலில் 12ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், மாநிலஅமைச்சர்கள் கோ.சி.மணி, உபையதுல்லா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். எனதுதலைமையில் விழா நடக்கிறது.
கவிஞர் வைரமுத்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பெரியார் பன்னாட்டுமையத்தின் இயக்குனர்கள் சோம. இளங்கோவன், இலக்குவன் தமிழ் ஆகியோர்சிறப்புரை நிகழ்த்துவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications