தமிழக ஆளுநர் பர்னாலாவுக்கு பதவி நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக் காலம் மேலும் நீட்டிக்கப்படவுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டில் இரண்டாவது முறையாக தமிழக ஆளுநராக பர்னாலா பதவியேற்றார். பாஜக ஆட்சியில்நியமிக்கப்பட்ட ராம்மோகன் ராவைத் தூக்கிவிட்டு பர்னாலாவை நியமித்தது காங்கிரஸ் அரசு.இந்த நியமனத்தில் முதல்வர் கருணாநிதிக்கு முக்கிய பங்குண்டு. அவரது பரிந்துரையின் பேரிலேயே பர்னாலாகவர்னராக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்கு கவர்னராக நியமிக்கப்பட்ட அவரது பதவிக் காலம் முடிவுக்குவருகிறது.
இதையடுத்து அவரையே கவர்னர் பதவியில் நீடிக்கச் செய்ய கருணாநிதி விரும்புகிறார். இதை மத்திய அரசும்ஏற்றுக் கொண்டுவிட்டது. இதையடுத்த அவரது பதவி நீட்டிப்பு தொடர்பான கோப்புகள் ஜேனாதிபதி கலாமுக்குஅனுப்பப்பட்டுவிட்டன.
கலாமின் ஒப்புதல் கிடைத்தவுடன் பர்னாலாவின் பதவி நீடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.












Click it and Unblock the Notifications