1,000 புதிய பஸ்கள் வாங்க தமிழக அரசு முடிவு

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்:

தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக 1,000 பஸ்கள் வாங்கப்படும் என போக்குவரத்துத்துறைஅமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

பெரம்பலூர்-சென்னை இடையே விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களை இயக்கி வைத்து நேரு பேசுகையில்,

தமிழக போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 17,300 பஸ்கள் உள்ளன. இதில் 8,500 பஸ்கள் பழையவை.இவற்றை வாங்கி 5 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. இந்த பஸ்களை சீர்படுத்த ரூ. 850 கோடி வரைதேவைப்படும்.

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மனதில் கொண்டு போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக 1,000பஸ்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 100 கோடி செலவிடப்படும்.

பள்ளி மாணவ, மாணவிகளின் இலவச பஸ் பாஸ் திட்டத்துக்கு ரூ. 75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டீசல் விலைஏற்றத்தால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை தவிர்க்க ரூ. 25 கோடி சிறப்பு நிதியை மாநில அரசுஒதுக்கியுள்ளது என்றார்.

இந் நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராசாவும் கலந்து கொண்டார்.

சென்னையில் இருப்பது போல திருச்சியிலும் தொழில்நுட்பப் பூங்காவை தொடங்க மத்திய அமைச்சர் ராசா வழிசெய்ய வேண்டும் என்றும் நேரு கேட்டுக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+