கருணாநிதிக்கு புதிய கேம்ப் ஆபிஸ்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொது மக்களை முதல்வர் கருணாநிதி சந்திக்க ஒரு புதிய கேம்ப் ஆபிஸ் உருவாக்கப்படவுள்ளது.
கருணாநிதியை சந்திக்க தினமும் ஏராளமான பொது மக்களும் கட்சியினரும் கோபாலபுரம் வீட்டிலும் ஆலிவர்ரோடு வீட்டிலும் குவிகின்றனர். அதே போல அண்ணா அறிவாலயத்திலும் பெரும் கூட்டம் கூடுகிறது. மேலும்கோட்டையிலும் ஏராளமான மக்கள் கூடி கருணாநிதியிடம் நேரடியாக மனுக்களை அளிக்க முயல்கின்றனர்.இதனால் வீட்டிலும் கோட்டையில் பெரும் நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க ஒரு கேம்ப் ஆபிஸைஉருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்றி வாரியம் அருகே பொதுப் பணித்துறைக்குச் சொந்தமானகட்டடத்தில் ஒரு அலுவலகத்தை அமைத்து அங்கு பொது மக்களை கருணாநிதி நேரில் சந்திக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தில் இப்போது உலக வங்கி தொடர்பான அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தைஇடம் மாற்றிவிட்டு கருணாநிதிக்கு கேம்ப் ஆபிஸ் அமைக்கப்படவுள்ளது.
இனிமேல் பொது மக்கள் முதல்வரை இங்கு தான் சந்திக்க முடியும் என்றும் அறிவிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications