முல்லைப் பெரியாறு, மதானி: கருணாநிதியுடன் அச்சுதானந்தன் இன்று சந்திப்பு
சென்னை:
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாகவும், மதானி விவகாரம் தொடர்பாகவும் முதல்வர்கருணாநிதியை இன்று சந்தித்துப் பேசுகிறார் கேரள முதல்வர் அச்சுதானந்தன்.
பெரியாறு அணையின் உயரத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம்அனுமதியளித்தது. இந்த கட்டுமானப் பணியை தமிழக அரசே மேற்கொள்ளவும் நீதிமன்றம் அனுமதித்தது.ஆனால், இந்த உத்தரவை ஏற்க கேரளா அரசு மறுத்துவிட்டது. இந்த உத்தரவை செல்லுபடியாக்காமல் செய்யகேரளத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு, சட்டசபையை அவசரமாகக் கூட்டி கூடி முல்லை பெரியாறு அணையின்நீர்மட்டத்தை 136 அடியாகவே வைத்துக் கொள்ள வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
கேரளா அரசின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது.
இந்நிலையில், அங்கு நடந்த சட்டசபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி ஆட்சிக்கு வந்தள்ளது. அணைபிரச்சனையை தமிழகத்துடன் பேசித் தீர்க்க அந்தக் கூட்டணி முடிவு செய்துள்ளது.
இந் நிலையில் அச்சுதானந்தன் இன்று சென்னை வருகிறார். தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து இந்தப்பிரச்சனை குறித்து பேசவுள்ளார்.
அதே போல கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி உள்ள கேரள முஸ்லீம் கட்சியின் தலைவர்அப்துல் நாசர் மதானியை பரோலில் செல்ல அனுமதிப்பது குறித்தும் அச்சுதானந்தன் பேச உள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் மதானியை விடுவிக்க ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இந் நிலையில் மதானிக்கு ஜாமீன் அளிப்பது அல்லது பரோலில் செல்ல அனுமதிப்பது அல்லது தனியார்மருத்துவமனையில் வைத்து அவரது காலில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பது ஆகிய மூன்றில் ஏதாவதுஒன்றுக்கு சம்மதிக்குமாறு கருணாநிதியை அச்சுதானந்தன் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications